கம்பளி இருந்தும்
சளியுடன் தும்மும்
செம்மறி ஆடு ! – அமுதபாரதி
0
நம்மலாம் ” அச் …. அச் …” னு தான தும்மல் போடுவோம்,
ஒவ்வொரு “அச்” சுக்கு அப்புறம் “அம்மா” , “அப்பா” ன்னு ஏதாவது ஒன்னு சொல்லணும்,” அச் …. அச் …” னு மொட்டையாத் தும்முனா..
எங்க ஆச்சி ” ஏ நோனி.. ஏன் செம்மறிக் கெடா மாதிரி தும்முற ?
அம்மா அப்பான்னு எதாச்சும் சொல்லணும்” அப்படிங்கும்..
நாங்க எங்க வீட்டுலயே ஒரு செம்மறிக்குட்டி வளத்தோம் .
பேரு டேனியல் , டேனியல் எங்க அம்மா செல்லம்,எங்க அம்மா எங்க போனாலும் பின்னாடியே போவான். நான் தான் தினமும் அதுக்கு புட்டிப்பால் குடிப்பேன், டேனியல் நல்லா பெருசா ஆனதும் ஒரு ஆளுகிட்ட எங்க ஐயா வித்துட்டார்..
0
வரம் – ஆதவன்தீட்சண்யா
“ஆத்தா மகமாயி
உம் புண்ணியத்துல பையனாப் பொறந்துட்டா
கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்…”
ஏண்டா கும்பிடுறதுக்கு பொம்பள சாமி
கொழந்த மட்டும் ஆம்பளயா …
எனக்கு உங்கெடாவும் வேணாம்
ஒரு மயிறும் வேணாம்
0
நாங்க எங்க ஊருல ஆட்டுக் கறிக்கடை வச்சிருக்கோம்,நாங்களே சொந்தமா ரொம்ப ஆடு வளக்குறோம்.தீபாவளி அப்பலாம் விடிய விடிய கடை துறந்திருக்கும்,நாப்பது அம்பது கடா வரைக்கும் அறுப்பாங்க , ஆட்டுக் காலு , தலை இதையெல்லாம் தீயிலே வாட்டி முடியெல்லாம் எடுப்பாங்க , எங்க கடைல சொக்கன்னு ஒருத்தர் வேலை செஞ்சார், அவர் தான் காலு மண்டைய வாட்டுவார்.நான் பக்கத்துல நாய் எதும் வராத படிக்கு காவலுக்கு இருப்பேன்.மண்டைய வாட்டும் போது ஆட்டுக் காது ரெண்டும் புஷ்னு புடைச்சு ஊதி டொப்புன்னு வெடிக்கும்.நான் உடனே வெடுக்குன்னு காதுக்கறியைப்
புடுங்கித் தின்னுப்புடுவேன்.அதப்பாத்துட்டு எங்க சின்னய்யா ” எலே பேக்கூ_
காதப் பிச்சிட்டா , சின்ன மண்டையாத் தெரியும்டானு சத்தம் போடுவாரு,
ஆனாலும் நான் கேக்காம பிச்சிப் பிச்சித் தின்னுட்டுதான் இருப்பேன் .
0
ஞாயித்துக் கிழமை சாயந்தரம் ஆச்சுன்னா சைக்கிள எடுத்துக்கிட்டு
கருசக் காட்டுக்குப் போவேன்.எங்க தெருவுல சங்கிலின்னு ஒருத்தன் இருக்கியான்,
அவனும் நானும் தான் சேந்து போவோம்.அரிசிக் குழைன்னு ஒரு செடி இருக்கு ,
அந்தச் செடிய ஆடுக நல்லாத் திங்கும் , அந்தச் செடி கரிசகாட்டுல எக்கச்சக்கமா
முளைச்சு புடுங்குறதுக்கு ஆளு இல்லாமக் கிடக்கும்.அந்தச் செடில இருக்குற
இலை அரிசி மாதிரியே குட்டியா இருக்கும் .. அதுனாலத்தான்
அதை அரிசிக்குழைன்னு சொல்லுவாங்க ,ஆடுக இருக்கே அதுக அகத்திக்கீரையும்
ரொம்பா நல்லாத் திங்கும் , ஒரு குழை கெட்டி வச்சா செத்த நேரத்துல மொக்கித் தின்னூடும்.சில ஆடுங்க சோளத்தட்டை திங்கும் போது தொண்டைல சிக்கிக்கிடும் , இதை ஆட்டுக்கு சொருவிக்குச்சுன்னு சொல்லுவாங்க,தட்டை வசமாச் சிக்கிக்கிச்சின்னா ,உடனே ஆட்டுக்கு இழுக்க ஆரம்பிச்சிடும்,சாவுறதுக்குள்ள அறுத்து உப்புக்கண்டம் போட்டு
வெயில்ல காய வச்சிருவோம் , ஒரு கிலோ கறி காஞசதுக்கப்புறம் காக்கிலோ ஆயிடும், காஞ்ச கறியை எண்ணைல வறுத்துத் திம்பாங்க …
0
வெட்டிய ஆட்டிற்கு
சவக்குழி
ஒரு ஜான் வயிறு – யாரோ
0
கிராமத்துலலாம் நிலத்தை உழுது முடிஞ்சதுக்கப்புறம் வெள்ளாமை போடுறதுக்கு முன்னாடி அந்த நிலத்துல ஆட்டுக்கிடையோ மாட்டுக் கிடையோ போடுவாங்க.அதாவது மொத்தமா ஒரு நூறு ஆடுகளையோ மாடுகளையோ உழுது போட்ட நிலத்துல கெட்டிப் போட்டுறவாங்க ,அதைத் தான் கெடை போடுறதுன்னு சொல்லுவாங்க ..ஆடு மாடுக போடுற முறையே புழுக்கையும் ,சாணியும் நிலத்துக்குநல்ல உரம்.நான்லாம் ஆட்டுப் புழுக்கைய ஆச்சரியாமப் பாப்பேன், எப்படி இந்த ஆடுக மட்டும் கொண்டக் கடலை மாதிரியே புழுக்கை போடுதுன்னு ?
0
கெடாத்தொங்கு – ஏக்நாத்
கழுத்து
தொங்கு விழாம
கெடா வெட்டுனா தான்
குடும்பம் உருப்படும்
சுருட்டு சுப்பையா
போட்டு வைத்ததிலிருந்து
பரமசிவத்துக்கு குலை நடுக்கம்.
போன முறை
கெடா வெட்டின
குட்டையன் கால்
ஒடிஞ்சு போனது
ஞாபகத்துக்கு வந்து
திக்கென்றது.
ஆறேழு வருஷத்துக்கு
முன்பிருந்து
கெடா வெட்டியவர்கள்
வரலாறு புரட்டினார்கள்
வேண்டாம் வேண்டாமென்று
தலையிலடித்தாள் மனைவி.
இப்ப மாட்டேன்னா
கவுரதை குறையும்.
கொஞ்சம் பயமும்
கொஞ்சம் வீராப்பும் கலந்து
ஒத்தக் காலில் நின்றான்
நான் தான் வெட்டுவேனென்று.
கொடை நாளில்
மனசும் கையும் நடுங்க
வெட்டிய நான்கு
கெடாக்களுமே தொங்கு தான்.
0
தமிழில் மொத்தம் 13 ஆயிரம் பழமொழிகள் இருக்கின்றன,இவற்றுள் பெரும்பான்மையான பழமொழிகள் விவசாயம் சம்பந்தப்பட்டவை.பதிவோடு தொடர்புடைய ஒரு பழமொழி..
ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு ஐயங்காருக்கு மூணு கொம்பு
0
அக்கா வளர்த்த ஆடு
நிற்கிறது அய்யனாருக்கென்று..
மாலையிட்டு நீரேற்றி
ஒரு நாள் கேட்டனர்…
குளிரில் உதறிய தலை
குறிப்பாய்ச் சொல்லிவிட்டதாம்
” இப்போது பூசை வேண்டாம்
அய்யானார் காத்திருக்கிறார் ”
அக்கா தனக்குப் பார்த்த மாப்பிள்ளையை
பிடிக்கவில்லை என்றாள்..
“உதை விழும் கழுதை…
உனக்கென்ன தெரியும்”
அப்பா மிரட்டலில்
அக்கா ஆசைகள் அணைந்தன
துள்ளிக் குதிக்கிறது
அக்கா வளர்த்த ஆடு
பாவம் அவள் மட்டும்
அழுது கொண்டிருக்கிறாள் – முத்தையன்
0
போட்டி
கேள்வி 1 :
கீழே இருப்பது சிறுகதை ஒன்றின் முதல் பத்தி,இந்தக் கதையின் தலைப்பு என்ன ?
கதையை எழுதிய எழுத்தாளர் யார் ?
பெரிய கருப்பன் பதினாறு வெள்ளாடுகள் வளர்த்தார்.தெருமுக்கில் அவரது கூரைவீட்டுத் திண்ணை சாணிமெழுகிக் கிடக்கும். எதிரே ஆகாயத்துக்கு வளர்ந்து பெரும்பெருங்கிளைகளோடும் அடிமரத்தில் பிசினோடும் நிற்கும் வேப்பமரக் காற்றை வாங்கியபடி பார்த்தால்,அருகிலுள்ள கட்டாந்தரையில் நீளநீளமான மொக்காங்கட்டைகளில் பதினாறு ஆடுகள் சின்னதும் பெரியதுமாகக் கட்டப்பட்டுக் கிடக்கும் .
பெரிய கருப்பன் விடிகாலை ஆறுமணிக்கெல்லாம் கஞ்சி குடித்து , கக்கத்தில்
ஒரு சாக்கோடு மொக்காங்கட்டைகளிலிருந்து பதினாறு ஆடுகளையும் தும்பு தெறித்து ஆளுயரக் கத்திக் கம்பை முதுகில் வைத்து,இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உள்ளே விட்டுத் தெருப்பூராவையும் நடக்கும் பரப்பாக்கிக் கிளம்புவார்.பதினாறு ஆடுகளும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவை போல் பெரியகருப்பன் பின்னாலேயே நடக்கும்.அவர் வேகமாக நடந்தால் வேகமாக மெள்ள நடந்தால் மெதுவாக , பதினாறும் ஒன்று போல் நடையில் அவர்பின்னால் நடக்கும்.
கேள்வி 2:
இவர் ஒரு இரண்டெழுத்து நடிகை. இவரின் பெயரில் வரும்
இரண்டு எழுத்துக்களுமே ஒரே எழுத்து தான்.இவர் ஒரே ஒரு தமிழ்ப்
படத்தில் மட்டும் தான் கதாநாயகியாக நடித்தார்.அவர் யார் ?
கேள்வி 3 :
ரஜினிகாந்த் நடித்த திரைப்படமொன்றின் பெயரிலேயே ஒரு சிற்றிதழ் வெளிவந்தது.அந்தப் படத்தின் பெயரும் , அந்த எழுதாளரின் பெயரும் நான்கு எழுத்துக்கள் கொண்டவை.அந்த சிற்றிதழின் பெயரென்ன ? அந்த சிற்றிதழை நடத்திய எழுத்தாளர் யார் ?
கேள்வி 4 :
நீயில்லையேல் பாவைமனம் பாலைவனம் இந்த வரி இடம் பெற்ற பாடல் எது ?
கேள்வி 5 :
அரங்கநாதன் என்ற பெயரை இயற்பெயராகக் கொண்ட தமிழ்க் கவிஞரின்
புனைபெயர் என்ன ?
0
ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படும்.
ஒரே கேள்விக்குப் பலர் சரியான விடை அளித்தால் முதலில் பதிலளித்தவருக்கே
பரிசு வழங்கப்படும்
maravantu,
Question 2: Answer JIJI – ivar naditha padam ninaivellam nithya? ivar Gemini Ganeshan ponnu thaane…
nalla puthakamaaka anuppavum
endrendrumanbudan, seemachu
Comment by seemachu — March 10, 2006 @ 7:48 pm |
maravantu,
Answer for Question 3:
Viduthalai – magazine. Editor Veeramani
Viduthalai – Rajini Movie, Director K Vijayan, Year 1986
Innoru pusthakamum nallathaa anuppu rajaa..
endrendrum anbudan,
seemachu
Comment by seemachu — March 10, 2006 @ 8:09 pm |
Dear Seemachu
JIJI is the correct answer ..
Viduthalai also seems to be correct answer ..
But one more movie is there with 4 letters , try to find out
Thanks
maravantu
Comment by maravantu — March 11, 2006 @ 3:46 am |
01. கி.ரா. (சும்மா கெஸ்ஸிங்)
02. ஜிஜி
03. மனிதன்?
04. கண்ணா வருவாயா – மனதில் உறுதி வேண்டும் திரைப்படம்
05. ஞானக்கூத்தன்.
Comment by Haranprasanna — March 11, 2006 @ 5:36 am |
Comment by maravantu — March 11, 2006 @ 9:25 am |
Comment by maravantu — March 11, 2006 @ 9:29 am |
அன்புள்ள பிரசன்னா
போட்டியில் கலந்து கொண்டதற்கு நன்றி..
//01. கி.ரா. (சும்மா கெஸ்ஸிங்)//
தவறான விடை
//02. ஜிஜி//
சரியா விடை , ஆனால் ஏற்கனவே சீமாச்சு இதைச் சொல்லிவிட்டார்
//03. மனிதன்?//
வாழ்த்துக்கள் , மனிதன் சரியான விடை தான், மனிதன் சிற்றிதழ் நடத்திய எழுத்தாளர் பெயரையும் சொல்ல வேண்டும்
//04. கண்ணா வருவாயா – மனதில் உறுதி வேண்டும் திரைப்படம்//
தவறான விடை
//05. ஞானக்கூத்தன். //
சரியான விடை
என்றும் அன்பகலா
மரவண்டு
Comment by maravantu — March 11, 2006 @ 9:33 am |
கேள்வி ஒன்றுக்கு பதில்,
மேலாண்மை பொன்னுசாமி
என்றென்றும் அன்புடன்
சீமாச்சு
Comment by seemachu — March 11, 2006 @ 4:29 pm |
//மேலாண்மை பொன்னுசாமி//
wrong answer
Comment by maravantu — March 12, 2006 @ 9:16 am |
Manithan ithazh nadaththiyavar peyar “Vindhan”
Already neenga enakku oru book tharavaeNdiyirukku, now you have to give me 1.5 books
N. Chokkan,
Bangalore.
Comment by N. Chokkan — March 13, 2006 @ 11:44 am |
Paavaimanam, paalaivanam … Its from “Poonthendralae Nee Paadivaa” from an earlier SARajkumar movie
But, Which movie?
N. Chokkan,
Bangalore.
Comment by N. Chokkan — March 13, 2006 @ 12:04 pm |
Dear Chokkan
Congrats
Vinthan was publishing the Manithan magazine , correct answer
The line is from poonthendralE song only , correct answer
Movie name is ManasukkuL maththaappoo – I suppose this is S.A Rajkumar’s
first movie
I am disclosing the answer for the first question
That given paragraph is from the short story , “Pathinaaru periya karuppan”, written by Kantharvan
I am the prize winner
I will let you know the details abt the prizes shortly
Thanks
Ganesh
Comment by maravantu — March 15, 2006 @ 7:42 am |