அன்புள்ள நண்பர்களே
சென்னையில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது.நாளை சென்னைக்குக் கிளம்பி வருகிறேன்.பெங்களுரில் இரண்டு வருடம் போனதே தெரியவில்லை.
நான் பெங்களுர் வருவதற்கு முன்னால் சென்னையில் 3 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன்.மீண்டும் சென்னைக்குத் திரும்புவது ஒரு விதத்தில் சந்தோசமாகவும் , ஒரு விதத்தில் கவலையாகவும் இருக்கிறது.
தற்சமயம் உடல் நிலை வேறு சரியில்லை 😦
ஊர் ஊரா உலக்கை சுத்துனாலும் கடைசில
உரல்ல வந்துதான் விழனும் அப்படின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.
அதே மாதிரி நான் எங்க போனாலும் இங்க வந்து தான் புலம்பிட்டுதான் இருப்பேன்
என்றும் அன்பகலா
மரவண்டு