மரவண்டின் ரீங்காரம்

August 19, 2007

SPB Vani Jayaram Duets

Filed under: Uncategorized — மரவண்டு @ 9:39 am

கள் வடியும் பூக்கள் என்ற படத்தில் வானம் பன்னீரைத் தூவும் காலம் கார்காலமே என்றொரு பாடல் வரும்

அந்தப் பாடலின் சரணத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு வரி

அடி ராத்திரி வெயிலே ஒரு பாய் போடு மயிலே
தலைவனாவன் தலைவியைத் தழுவும் பொழுது ஏற்படும் கதகதப்பை ராத்திரி வெயிலுக்கு உவமையாகக் கூறியிருப்பது கவித்துவம் நிறைந்ததாக இருக்கிறது.
0

அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படத்தில் கங்கை அமரன் எழுதிய உன் பார்வையில் ஓராயிரம் கவிதை என்ற பாடலில் வரும் தினமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் என்கின்ற வரியை கவிஞர் வாலி , கங்கை அமரன் சம்மதத்துடன் நிலாவே வா செல்லாதே வா என்ற பாடலில் இவ்வாறு பிரயோகித்திருப்பார்….

எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே
0

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி என்ற பாடலில் 

அவன் தான் திருடன் என நான் நினைத்திருந்தேன்…நானும் அவனைத் திருடி விட்டேன்… முதன் முதலாக திருடியதால் முழுதாய்த் திருட மறந்து விட்டேன் ..என்ற வரிகள் கண்டுபிடி அவளைக் கண்டுபிடிநெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி என்ற பாடலில் முதல் முதல் திருடியதால் முழுசாய்த் திருடவில்லை என்று கையாளப்பட்டிருக்கும்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம் ஜோடி இணைந்து பாடிய சில பாடல்களை உங்களுக்காக இங்கேவலையேற்றம் செய்திருக்கிறேன்கேட்டு மகிழுங்கள்

எஸ்.பி.பி. வாணி ஜெயராம் ஜோடிப் பாடல்கள் – ( பகுதி : 1 )

1) ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் – நீயா
2) ஒரு தேவதை வந்தாள் – நீதிபதி
3) சுகம் சுகம் – வண்டிச்சோலை சின்னராசு
4) தேன் சிந்தும் மலரல்லவா – கரிப்பும் இனிப்பும்
5) அதோ வாராண்டி – பொல்லாதவன்
6) கோடி வசந்தம் குடும்ப – சுமதி
7) பொன்னோவியம் ஒன்று – குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
8] சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் – நாடகமே உலகம்
9) இரவும் பகலும் – பில்லா
10) குறிஞ்சி மலரில்- அழகே உன்னை ஆராதிக்கிறேன்
11) வேண்டும் வேண்டும் – வசந்தத்தில் ஓரு வானவில்
12) தலைவி – மோகன புன்னகை

3 Comments »

  1. எஸ்.என். சுரேந்தர்
    ஒரு மேடையில் சொன்னது எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடுவது போல் சில பாடல்களை எம்மால் பாட முடியாது .அவரோடு உடன் பாடியிருக்கிரீன்

    Comment by baasakar — March 8, 2012 @ 1:26 pm | Reply

  2. எஸ்.என் சுரேந்தர் சொன்னது . எஸ்.பி.பாலசுப்ரமணியம் அண்ணன் எமக்கு கிடைத்த பொக்கிஷம் .சில பாடல்களை எப்படி பாடுவார் என்று கற்பனை செய்ய முடியாது . இதனால்தான் இளையராஜா அதிகம் எஸ்.பி.பி. யை பயன்படிதியுள்ளார்
    ஹிந்தி ,கன்னட ,தெலுங்கு
    இசையமைப்பாளர்களும்
    சில கடின
    பாடல்களுக்கு எஸ்.பி.பி.யை பயன்படுத்தியுள்ளர்கள்
    எஸ்.பி.பி. யின் பாடல்களை கேட்டல் நன்கு புரியும்
    இளையராஜா முதன் முதலாக சென்னை வந்த போது – அப்போது எம்.எஸ்.விசுவநாதன் இசையில் பின்னணி பாடகராக புகழ் பெற்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம் எனும் இளம் பாடகர் தன் சொந்த இசைகுழு வைத்திருந்தார்,மேடை நிகளிச்சி நடுத்துவார்.இதில் இளையராஜாவை பாரதிராஜா எஸ் பி.பி. யின் இசைக்குழுவில் சேர்த்தார். அன்றுமுதல் எஸ்.பி.பி. மேடையில் பாட இளையராஜா இசை பனி செய்தார். இதில் மலேசியா வாசுதேவனும் எஸ்.பி.பி. இசை குழுவில் பனி புரிந்தார்
    .இப்படிதான் இவர்கள் நண்பர்களானார்கள்
    கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தர்வர்கள்

    Comment by baasakar — March 8, 2012 @ 1:52 pm | Reply

  3. வணக்கம் ,
    ஜெயச்சந்திரனின் பல பாடல்களை you tube ல் பதிவேற்றியுள்ளேன்.
    http://youtu.be/WxuOS74mqjc கேட்டுப்பாருங்கள்.
    நன்றி!
    அன்புடன்,
    செல்வன்.

    Comment by selvan — April 14, 2012 @ 7:29 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.