நான் ரசித்த சில சென்ரியூ கவிதைகள் இதோ உங்களுக்காக…
0
குளிர் சாதனப் பெட்டிக்குள்
வேர்த்து விறுவிறுத்து
பீர் பாட்டில் !
0
சிலிர்க்கவில்லை
எத்தனை பேர் தொட்டும்
கோயில் நந்தி !
0
அம்மா சூடு போட்டதில்
பெயர் தான் அழிந்துபோனது
தழும்பில் அவள் ஞாபகம் !
0
அரசியல் வாதி பேசியதும்
ஆவேசமாய் பொங்கியது
சோடா !
0
குஸ்தி வீரன்
நண்பனுக்கு எழுதினான்
நான் பலம் நீ பலமா ?
0
இழவு வீட்டில்
இன்ப அதிர்ச்சி
உயில் வாசிக்கும் வக்கீல் !
0
வாடிக்கையாளருக்கு காதல் தோல்வி
வருத்தப் பட்டான்
சலூன் காரன் !
0
ஜோடி சேர்ந்தும்
துயரந்தான்
வண்டி மாடுகள் !
0
தனது ஜோடியைக்
காணாமல் தவித்தது
குடிகாரனின் செருப்பு !
0
பங்களா மனிதர்களுக்கு
ரொம்பம் பிடிக்கும்
சின்ன வீடு !
0
50 பேர் சுட்டு கொலை
அச்சச்சோ
க் கன்னாவைக் காணோம் !
0
காது குடைந்தேன்
சுகமாயிருந்தது
கோழிக்கு எப்படியோ ?
0
வாசல் வரை வந்து
வழியனுப்பும் மனைவி
எதிர் வீட்டில் இளம்பெண் !
0
டாக்டர் சொல்லாமலேயே
மூச்சை இழுத்துவிட்டான்
எதிரே நர்ஸ் !
0
தேர்தல் திருவிழா
முக்கிய அறிவிப்பு
திருடர்கள் ஜாக்கிறதை !
0
நண்பர்களுக்கு தடை உத்தரவு
வயதுக்கு வந்துவிட்டாள்
தங்கை !
0
குறுகிய வளைவு
நிர்வாண சுவரரொட்டி
சிவலோக பதவி !
0
உடுக்க உடையுண்டு
உண்ண உணவில்லை
ஸோ கேஸ் பொம்மை !
0
பிஞ்சு விரல்கள்
உதிரும் வானவில்
தப்பியோடும் வண்ணத்துப்பூச்சி !
0
அரசு அலுவலரின் கதவு
சொல்லாமல் சொல்லியது
தள்ளு !
0
ஓடியது சிங்கம்
விரட்டியது மான்
குடை ராட்டிணம் !
0
வயதான கிழவிக்கு
பச்சைக் கூந்தல்
தலையில் புல்கட்டு !
0
பழைய சோற்றின்
பரிணாம வளர்ச்சி
மொட்டை மாடியில் வடகம் !